Tuesday, September 25, 2012

வேலை செய்ய மறுத்து சாமியாடிய சென்னை வங்கி அதிகாரி


சென்ற சனிக்கிழமை 22 செப்டம்பர் 2012 அன்று சென்னை அண்ணாநகர் புளு ஸ்டார் அருகே உள்ள அரசு வங்கிக்கு என் 3 1/2 வயது மகனுடன் சென்றிருந்தேன்.  அவனுக்கு பள்ளி விடுமுறை என்பதால் வங்கியை அறிமுகப்படுத்திய மாதிரியும் இருக்கும், அவனுக்கும் பொழுது போன மாதிரி இருக்குமே என்று அழைத்துச் சென்றிருந்தேன்.

நான் வேறொரு வங்கிக்கு சென்று விட்டு அங்கு சென்றதால் உள்ளே நுழையும் போதே வங்கி அலுவல் முடியும் நேரமான 12 மணிக்கு 5 நிமிடம் மட்டுமே இருந்தது. எனக்கு என்னுடைய பாஸ் புக்கில் பதிய வேண்டியிருந்தது. அந்த கவுண்டரில் கூட்டமில்லை. நேரடியாக சென்று கொடுத்தேன். அதனை வாங்கிப் பார்த்த அந்த பிரிவில் இருந்த பெண் அதிகாரி, “5 பக்கம் எண்ட்ரி போட வேண்டுமே” என்று தயங்கினார். பின்னர் “எந்த பிராஞ்ச் அக்கவுண்ட்?” என்று தட்டிக் கழிக்கப் பார்த்தார். ஆனால் பாவம் அது அந்த பிராஞ்ச் அக்கவுண்ட் தான் என்று நான் சொன்னதால் வேறு வழியில்லாமால் சலிப்புடன் அவர் எண்ட்ரி போட்டு கொடுப்பதற்குள் 5 நிமிடம் ஆகிவிட்டது.

எனக்கு மற்றுமொரு வேலை இருந்தது. எனக்கு இணைய தளம் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய டிரான்ஸாக்ஸன் பாஸ்வேர்ட் வேண்டி இருந்தது. அது பற்றி விசாரித்தேன். அதற்கு மேல்மாடிக்கு போகச் சொன்னார்கள். நானும் பையனும் மேல் மாடிக்கு போவதற்கும் மணி 12 ஆவதற்கும் சரியாக இருந்தது. கதவை அங்கிருந்த பெண் ஊழியர் பூட்ட முயற்சிக்கும் போது நாங்கள் சரியாக உள்ளே சென்று விட்டோம். சட்டப்படி பார்த்தால், 12 மணிக்கு உள்ளே நுழைபவர்களுக்கு அவர்கள் சேவை செய்ய வேண்டும்.

நான் உள்ளே நுழைந்து அங்கு முதலில் இருந்த பெண் ஊழியரிடம் எனது தேவை குறித்து விசாரித்த போது அவர் “நீங்கள் 12 மணிக்கு வந்தால் அதெல்லாம் முடியாது. இருந்தாலும் அங்கு இருப்பவர் தான் இது பற்றி கூற வேண்டும்” என்று வேறு ஒருவரை கைகாட்டினார். அவர் முன் ஏற்கனவே மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள். நானும் பையனும் சென்று அமர்ந்து கொண்டோம். அடுத்த சில நிமிடங்களில் அந்த மூன்று பேரின் தேவைகளுக்கும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி எதுவும் செய்யாமல் அனுப்பி வைத்தார்.

எங்கள் முறை வந்து நாங்கள் அவரிடம் போய் நிற்பதற்கும், மேலும் இருவர், மூடிய கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது. அவர்களைப் பார்த்ததும், எனது எதிரே இருந்த வங்கிப் பெண் அதிகாரி, சாமி வந்தவர் போல் எழுந்து நின்று கொண்டு உச்ச குரலில் அந்த ஹாலே அதிரும்படி, “12 மணிக்கு மேல் என்னால் வேலை செய்ய முடியாது. தொடர்ந்து இப்படியே கதவைத் திறந்து கொண்டு ஆட்களை வரவிட்டால் நான் வேலை செய்யாமல் எழுந்து வெளியே சென்று விடுவேன்...” என்று கத்த ஆரம்பித்தார்.

அவர் திடீரென்று எழுந்து இப்படி கத்தியதைக் கண்ட என் மகன் பயத்தில் என் கால்களை கட்டிக்கொண்டான். அவர் இப்படி நடந்து கொள்வார் என்று நானே எதிர்பார்க்கவில்லை. ஒரு உயர் பதவியில் இருக்கும் வங்கி அதிகாரி, ஒரு சில நிமிடம் அதிகமாக வேலை செய்தால் தான் என்ன குறைந்தா போய்விடுவார். மேலும் அங்கு ஒன்றும் கூட்டமாக யாரும் வரவில்லை. மேலும் அப்படி உள்ளே நுழைந்த இருவரும் கூட ஏற்கனவே ஒரு மணி நேரத்திற்கு முன்பே வந்தவர்கள் தான் என்பது அவர்கள் கூறியதிலிருந்து தெரிந்தது. வங்கி அதிகாரிகள் அவர்களை மாடிக்கும் கீழேயும் அலைய வைத்ததில் தான் நேரம் கடந்திருக்கிறது.

பொதுவாக எல்லா வங்கியிலும், பணப் பரிவர்த்தனை தவிர இதர வேலைகள் பற்றி தகவல்கள் பெற பண பரிவர்த்தனை நேரம் முடிந்து தான் வரச் சொல்லுவார்கள். அப்போதுதான் கூட்டம் இல்லாமல் இருக்கும் என்று வேறு கூறுவார்கள். அன்று அங்கு வந்தவர்கள் அனைவருக்கும், பண பரிவர்த்தனை சம்பந்தமான வேலை எதுவும் இல்லை. அப்படி இருக்க, அங்கு வந்த வாடிக்கையாளர்களிடம் அப்படி கத்தி கூப்பாடு போடாமல், அவர்கள் எதிர்பார்த்து வந்த வேலையை செய்யாவிட்டாலும் பரவாயில்லை அவர்களைக் கடிந்து கொள்ளாமல் சாந்தமாக அடுத்த நாள் வரும்படி சொல்லி அனுப்பி விட்டு பின்னர் அவர்களின் சக அதிகாரிகளிடம் எப்படி வேண்டுமானாலும் சாமியாடியிருக்கலாமே?

இந்த மின்சார தட்டுப்பாட்டு நேரத்திலும் 6 அல்லது 7  பேர் மட்டுமே வேலை செய்யும் அந்த பெரிய ஹால் முழுக்க ஏசி செய்து, அழகு படுத்தி வங்கியை கார்ப்பரேட் அலுவலகம் போல் மாற்றி வைத்து என்ன பிரயோஜனம், வேலை செய்யும் வங்கி அதிகாரி மனம் இன்னும் கீழ்நிலையில் தானே இருக்கிறது.

வாடிக்கையாளருக்கு இன்முகத்துடன் சேவை செய்யத்தான் அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அவர் மறந்துவிட்டார் போலும். அவர் எழுந்து கத்தி சாமியாடியது எப்படி இருந்தது தெரியுமா? அரசாங்க ஆஸ்பத்திரியில் கத்தும் அரசு மருத்துவர் போலவும், மின்சார அலுவலகத்தில் கடைசி தேதி அன்று கத்தும் மின் கட்டணம் வாங்கும் அலுவலர் போலவும், ரேசன் கடையில் மண்ணெண்ணை போடும் போது ரேசன் கடை அலுவலர் கத்துவது போலவும் இருந்தது. அங்கு இருந்த ரம்மியமான சூழலும், அதற்கு ஒவ்வாதது போல் அந்த வங்கி அதிகாரி போட்ட கூப்பாடும், எனக்கு  ‘அந்த’ தமிழ்ப் பழமொழியைத் தான் ஞாபகப்படுத்தியது. (பழமொழியை சொல்லவும் வேண்டுமா?).

ஆனால் அதே வங்கியில் ஒரு சுறுசுறுப்பான எப்போது இன்முகத்துடன் கூடிய வங்கி அதிகாரி ஒருவர் வேலை செய்து வந்தார். நான் வங்கிக் கணக்கு துவங்கிய போது அவர் தான் எனக்கு வங்கியின் இணைய சேவைகளை எல்லம் வழங்கினார். கணக்கு துவங்கி இரண்டு மூன்று வருடங்கள் கழித்தும் அவர் என்னுடைய இணைய நுழைவு சொல்லை ஞாபகமாக வைத்திருந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இத்தனைக்கும் நான் ஒன்றும் அடிக்கடி வங்கிக்குச் செல்பவன் அல்ல, ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ வருடத்திற்கு ஒருமுறையோ தான் செல்பவன். வங்கிக் கணக்கில் பணமும் எப்போதும் மினிமம் பேலன்ஸ் நெருங்கித்தான் இருக்கும். ஆனாலும் என்னையும் ஞாபகம் வைத்து எப்போது பார்த்தாலும், நான் சிரிப்பதற்கோ, வணக்கம் சொல்வதற்கோ முன்னரே என்னைப் பார்த்து சிரித்து வணக்கம் சொல்லி தலையசைக்கும் அவரின் முகம் இன்றளவும் என் மனத்தில் உள்ளது. அவர் இப்போது எந்த கிளையில் வேலை செய்கிறாரோ. ஆனால் அவர் பெயர் எனக்கு ஞாபகம் உள்ளது. சரியாக உழைப்பவர்களின் பெயரைச் சொல்லி பாராட்டுவதில் தப்பில்லையே. அவர் பெயர் சுடலை. (முழுப் பெயரும் அதுதான் என நினைக்கிறேன்.) அவரைப் போன்ற ஒரு சிலர் தன்னலமின்றி வேலை செய்வதால் தான் அரசு வங்கிகள் இன்றளவும் இயங்குகின்றன.

சுடலை சார் போன்றவர்கள் இன்முகத்துடன் வேலை செய்வதை காட்ட விரும்பி என் மகனை அழைத்து சென்றேன். வங்கிகள் குறித்த ஒரு நல்ல புரிதலை என் மகனுக்கு உருவாக்க விரும்பிய எனக்கு, கிடைத்தது என்னவோ ஏமாற்றம் தான்.

வங்கிக்குப் போவதையே தவிர்ப்பதற்காகத்தான் நான் டிரான்ஸாக்ஸன் பாஸ்வேர்ட் வாங்கச் சென்றிருந்தேன். ஆனால் அதனை பற்றி தெரிந்து கொள்வதற்கே நான் பலமுறை வங்கிக்கு செல்ல வேண்டியிருக்கும் போல் இருக்கிறது.

இதே நேரத்தில் மற்றொரு தனியார் வங்கி குறித்தும் சொல்கிறேன் கேளுங்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய அந்த வங்கி கணக்கில் நான் ஏற்கனவே பதிவு செய்திருந்த இணைய பாஸ்வேர்ட் மற்றும் டிரான்ஸாக்ஸன் பாஸ்வேர்ட் ஆகியவற்றை  மறந்து போயிருந்தேன். ஆனால் அவை இரண்டையும் வீட்டில் இருந்தபடியே மிகச் சுலபமாக இணையம் மூலம் நான் மீண்டும் புதிதாக பெற்றுவிட்டேன். இத்தனைக்கும் அந்த வங்கிக் கணக்கில் நான்கு வருடமாக இருந்த பணம் எவ்வளவு தெரியுமா? ரூபாய் நூறு தான்.

வாழ்க அரசு வங்கி அதிகாரிகள்! வளர்க அவர்கள் இன்முக சேவை!

7 comments:

Nagarajan.S said...

நீங்கள் மொட்டையாக அரசு வங்கி என்று தான் கூறியுள்ளீர்கள். இதைபோல கடமை தவறும் வங்கி அதிகாரிகளையும், ஊழியர்களையும் அந்த வங்கியின் பெயரைப்போட்டு இதைப்போன்ற இணைய தளத்தில் கிழி கிழி என்று கிழித்தால் தான் இவர்கள் திருந்துவார்கள். இவர்கள் செய்வது மக்கள் சேவை. இவர்களுக்கு சம்பளம் நமது வரிப்பணத்திலிருந்து கொடுக்கப்படுகிறது.அதை உணராமல் இந்த ஜென்மங்கள் வங்கியில் வேலை செய்தால் பெரிய கித்தாப்பு வந்து விட்டதாக நினைக்கிறார்கள்.

இராஜராஜேஸ்வரி said...

அங்கு இருந்த ரம்மியமான சூழலும், அதற்கு ஒவ்வாதது போல் அந்த வங்கி அதிகாரி போட்ட கூப்பாடும், எனக்கு ‘அந்த’ தமிழ்ப் பழமொழியைத் தான் ஞாபகப்படுத்தியது. (பழமொழியை சொல்லவும் வேண்டுமா?).

Unknown said...

A few days ago I had been to IOP Race course branch coimbatore..the system was not working,,when I was talking to a friendly officer(a Young lady) some other man, unsolicitedly shouted at me saying that the system is not working and you can make your complaints where ever you want..when I said , yes I shall make one ..not here ..but through internet..does he have to guts to give his name and designation..he ran away and the others who knew me said to leave the matter as it is as it may affect the chaps carrier
yours,
bhargavan

ram said...

The behaviour of officers of the bank reminds me of my own Imperial successor bank. When he says it is in two floors I think this may be also of the same Indias largest bank. But barrring few branches in most of the PSU banks the customer friendly atmosphere is not there. In contrast to this when I go to the India's second largest bank ICCI bank, whenever there are more people waiting for services an officer comes out and expedites the work by allocating the counters and makes sure the customers need not wait unnecessarily. The protest by PSU banks against Banking reforms is understandable as it questions the low productivity of the employees.

R.Subramanian@R.S.Mani said...

I am not in a Bank or otherwise employed;What I have a little is also invested only in Banks; But I could not understand your grievence by writing such a long write up blaming the emoloyee only as there is not even a little fault on yourselves; If they are encouraging such queries one after another evenafter the allowed time there would be no end and they have to serve till dawn; you know the Banking hours and you might have gone there a little bit advance without waiting till the eleventh hour, WHAT EVER YOUR
URGENCY MAY BE OR OTHERWISE YOU
HAVE NO RIGHT TO BLAME THEM IN SUCH APUBLIC PLATFORM ;
rsmoni

oneday1thought said...

not only in govt off, banks it can be seen all over india. like national flower, animal this is our national notorious pride.
jai hindh

sumathi said...

don't blame the Govt Bank employees, or the Govt employees. What is the status of Private concerns. If you go to a any private concerns unlike govt Banks,there will be so many employees but no one will serve us. When compare to Private concerns it is 100% better in Govt organisations.