Thursday, February 10, 2011

தேர்தல் வாக்குறுதிகள் - 1: பெட்ரோலுக்கு தமிழக அரசின் வரி ரத்து

அடுத்து வர உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிப்பது சம்பந்தமாக எனது முந்தைய பதில் சில (நகைச்சுவையான) ஆலோசனைகளை கூறியிருந்தேன்.

உண்மையிலேயே அரசியல் கட்சிகளுக்கு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் அவர்களுக்கு உதவும் நோக்கில் நாமும் சற்று தீவிரத்துடன் ஆலோசனை கூறினால் என்ன என்று தோன்றியது. அதன் முதல் படியாக இந்த பதிவை எழுதுகிறேன். இனிமேலும் தொடர்ந்து இது போன்ற எண்ணங்கள் தோன்றினால் எழுதுவதற்கு வசதியாக இதன் தலைப்பிற்கு ஒன்று என எண்ணமிட்டுள்ளேன். இனி வாக்குறுதி குறித்து காண்போம்.

இன்று அனைத்து பொருள்களின் இமாலய விலைவாசி உயர்வுக்கும் காரணம் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆகவே அரசியல் கட்சிகளுக்கும் இது தெரிந்திருக்கும் என நம்புவோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெட்ரோல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் தமிழக அரசின் 30% சதவிகித வரி. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19 அதிகமாகிறது.

உண்மையிலேயே தமிழக மக்களின் மனங்களை கவர விரும்பும் அரசியல் கட்சி தைரியமாக தங்கள் தேர்தல் அறிக்கையில் இந்த வரியை முற்றிலுமாகவோ அல்லது பாதி அளவாகவோ குறைப்பதாகவும், இதன் மூலம் ரூ.10 முதல் ரூ.20 வரை பெட்ரோல் விலை தமிழகத்தில் மட்டும் குறையும் எனவும் அறிவிக்கலாம். இது இலவச அறிவிப்புகளை விட மக்களின் மனங்களை கட்டாயம் கவரும் என்பதில் ஐயமில்லை.

No comments: