Wednesday, February 9, 2011

தமிழக மீனவர்களின் ஒரே எதிரியும், பல துரோகிகளும்

தமிழக மீனவர்களின் ஒரே எதிரி யார் என்றால் பச்சை குழந்தை கூட பளிச் சென்று சொல்லிவிடும் சிங்கள ராணுவ வீரர்கள் என்று. ஆனால் மீனவர்களுக்கு எதிரான துரோகிகளுக்கோ பஞ்சமில்லை. அவர்கள் எல்லாம் இன்றைக்கு தமிழகத்திலேயே பல்வேறு அரசியல்கட்சிகளாக பிரிந்திருந்தாலும், மீனவர்களுக்கு (மனப்பூர்வமாக) உதவுவதில் மட்டும் அவர்கள் ஒருவருக்கு மற்றவர் சலைத்தவர்களில்லை.

இனிமேல் ஒரு மீனவன் சுடப்பட்டு செத்தால் கூட திமுக தன்னுடைய மத்திய அமைச்சர்களை வாபஸ் வாங்கிக் கொள்ளும், அதிமுக தன்னுடைய அனைத்து எம்.பிக்களையும் வாபஸ் பெற்றுவிடும், மத்திய காங்கிரஸ் அமைச்சர்களான ப.சிதம்பரமும், ஜி.கே. வாசனும் பதவி விலகிவிடுவார்கள், ஐயா ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராஜ்யசபா தேர்தலில் நிற்கவே மாட்டார் என்று அறிவித்து விடுவார், ஈவிகேஎஸ் இளங்கோவனும், சுப்ரமணியன் சுவாமியும் இனிமேல் பத்திரிகைக்கு பேட்டியே கொடுக்கமாட்டோம் என்று அறிவித்துவிடுவார்கள்.

ஆகவே யாராவது போய் ராஜபக்சேவிடம் சொல்லுங்கள் மேலே சொன்னவையெல்லாம் நடக்காமல் இருக்கவேண்டுமென்றால் தமிழக மீனவனைச் சுடுவதை உடனே நிறுத்துங்கள் என்று!

No comments: