Wednesday, February 9, 2011

வாக்காளர்களுக்கு எதை இலவசமாக கொடுப்பதாக தேர்தல் அறிக்கையில் சொல்லலாம்?

இன்றைய தேதியில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் உள்ளவர்களின் எண்ண ஓட்டங்களில் ஓடிக் கொண்டிருப்பதெல்லாம் வாக்காளர்களை எப்படியெல்லாம் தங்களின் தேர்தல் அறிக்கையின் மூலம் கவரலாம் என்பதுதான்.

சென்ற சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி அறிவிப்பு தான் திமுகவுக்கு கடைசி நேரத்தில் வெற்றி அளித்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே அடுத்து வரும் தேர்தலில் என்ன வாக்குறுதியைக் கொடுத்து வாக்காளர்களை கவருவது என்று அனைத்து கட்சியினரும் முடியைப் பிய்த்துக் கொண்டுள்ளனர்.

ஏதோ நம்மால் முடிந்தது அவர்களுக்கு சில யோசனைகளை சொல்லி வைப்போமே? உதாரணமாக கீழ்க்கண்ட வாக்குறுதிகளை அவர்கள் அளிக்கலாம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்....

-வீட்டிற்கு இரு கைப்பேசிகள்
-வீட்டிற்கு ஒரு இண்டக்சன் அடுப்பு (அதுதாங்க கரண்ட் அடுப்பு)
(கரண்டே இல்லையென்றால் அதற்கு நான் பொறுப்பல்ல)
-வீட்டிற்கு ஒரு இன்வர்ட்டர் (கரண்ட் இல்லை என்று யாரும் சொல்லமுடியாது)
-வீட்டிற்கு ஒரு தையல் மிஷின்
-வீட்டிற்கு ஒரு கணிப்பொறி/மடிக்கணினி
-வீட்டிற்கு ஒரு இரு சக்கர வாகனம்

இவை கொடுத்தாலும் ஓட்டு கிடைக்குமா என்று சந்தேகமிருந்தால் இதனை வாக்குறுதியாக கொடுக்கலாம்.

-வீட்டிற்கு ஒரு நானோ கார்.

உங்களுக்கும் ஏதாவது யோசனை தோன்றினால் சொல்லுங்களேன், தமிழக அரசியல் கட்சிகளுக்கு உபயோகமாக இருக்கும்.

1 comment:

CITIZEN JANA said...

வீட்டில் யாரேனும் இறந்துவிடடால் சவப்பெட்டி இலவசம்.......